Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

மக்களே உஷார் IV

மக்களே உஷார் I      மக்களே உஷார் II       மக்களே உஷார் III  இன்றைக்கு  எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி . நடந்த சம்பவம் எந்த அளவுக்கு உ...


 இன்றைக்கு  எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி . நடந்த சம்பவம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அது உணர்த்தும் நீதி நமக்குத் தேவையான ஒன்று. நடந்ததாக சொல்லப்படும் சம்பவம் இதோ .




 அன்று அப்பெண் வெளியில் செல்லும்பொழுது அவளது கைப்பை களவாடப்படுகிறது. அந்த கைப்பையில் இருந்தவை அப்பெண்ணின்  அலைபேசி,ATM அட்டை மற்றும் கொஞ்சம் பணம். பத்து நிமிடம் கழித்து அவருடைய கணவருக்கு போன் செய்தால் அவருக்கு அதிர்ச்சி . காரணம் அப்பொழுதுதான் அவருக்கு அந்தப் பெண்ணின் அலைபேசியில் இருந்து "ATM குறியீட்டு எண்ணை கேட்டு குறுந்தகவல் வந்தது " அவரும் அதற்கு மறுமொழி அனுப்பி இருந்தார். 

இருவரும் சுதாரித்து வங்கியை தொடர்பு கொள்வதற்குள் அவர்கள் கணக்கில் இருந்து கணிசமான தொகை எடுக்கப்பட்டிருந்தது.

நீதி:

 1 . வெளியில் செல்லும் பொழுதெல்லாம் ATM  அட்டை எடுத்து செல்லவேண்டாம். 

 2 . அலைபேசியில் பெயர் போட்டு எண்களை பதிவு செய்யுங்கள். Home, Honey, Hubby, Sweetheart, Dad, Mum போன்ற பெயர்கள் இடுவதை தவிர்க்கவும். 

3.  இந்த மாதிரி குறுந்தகவல்கள் வந்தால் , உடனடியாக போன் செய்து உறுதி செய்துக்கொள்ளவும். 

4 . இதே போல் மின்னஞ்சல் மூலமாகவும் ஏமாற்று வேலை நடக்கிறது. எந்த வங்கியில் இருந்தும் உங்கள் ATM  குறியீட்டு எண்ணோ அல்லது உங்கள் வங்கி கணக்கிற்கான பாஸ் வோர்ட் கேட்டோ மின்னஞ்சல் செய்ய மாட்டார்கள். எனவே அவ்வாறு மின்னஞ்சல் வந்தால் அதை நம்ப வேண்டாம்.

5 . உங்கள் அலைபேசியில் உங்கள் வங்கி எண்ணோ அல்லது ரகசிய குறியீட்டு எண்களோ பதிவு செய்து வைக்க வேண்டாம்.

போற போக்குல ஒரு  கேள்வி ..
பந்தை மேலே எறிந்தால் அது மறுபடியும் கீழே விழுவது ஏன்? 

சரியான விடை எழுதுபவர்களுக்கு எனது பதிவு தொகுப்பு ஒன்று பரிசளிக்கப்படும்

30 கருத்துகள்

Ananya Mahadevan சொன்னது…

குட்.. இது எனக்கும் வந்திருந்தது எல்.கே. உருப்படியான மேட்டர் எல்லாம் ஒருங்கிணைச்சு எழுதறே! வாழ்த்துக்கள்!

Deepak Kumar Vasudevan சொன்னது…

இதன் தொடர் எச்சரிக்கையாக ஜிபிஎஸ் திருடர்கள் குறித்து ஒரு இடுகையை நான் இங்கு பதிவு செய்துள்ளேன்:

http://thamizhththendral.blogspot.com/2010/04/gps.html

தக்குடு சொன்னது…

ok sir!!!!...:)))

BalajiVenkat சொன்னது…

very useful forward message to be posted here for every one to understand it better...

and in the last line u have asked why the ball returns back if u throw up...

Funny answer
1) yaaru nammala mela pota apdinu therinchukarthukaga..

2) mela pidika yaarum illathathunala

real answer
Acceleration due to gravity

:::))))))

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

useful tips.. thanks

Bhushavali சொன்னது…

Ahaa.... Room pottu yosippaingalo!!!

Elephanta Caves - Part II
What I wore to Work

எல் கே சொன்னது…

//அநன்யா மஹாதேவன் said...

குட்.. இது எனக்கும் வந்திருந்தது எல்.கே. உருப்படியான மேட்டர் எல்லாம் ஒருங்கிணைச்சு எழுதறே! வாழ்த்துக்கள்!//

nandri

எல் கே சொன்னது…

//தீபக் வாசுதேவன் said...

இதன் தொடர் எச்சரிக்கையாக ஜிபிஎஸ் திருடர்கள் குறித்து ஒரு இடுகையை நான் இங்கு பதிவு செய்துள்ளேன்:

http://thamizhththendral.blogspot.com/2010/04/gps.ஹ்த்ம்ல்//
படித்தேன். நன்றாக உள்ளது

எல் கே சொன்னது…

// தக்குடுபாண்டி said...

ok sir!!!!...:)))//

:)

எல் கே சொன்னது…

//BalajiVenkat said...

very useful forward message to be posted here for every one to understand it better...


2) mela pidika yaarum இல்லாததுனால//

சரிதான் உனக்கு தொகுப்பு வந்து சேரும்

எல் கே சொன்னது…

//Ananthi said...

useful tips.. தேங்க்ஸ்///

நன்றி ஆனந்தி

எல் கே சொன்னது…

// Mitr Friend - Bhushavali said...

Ahaa.... Room pottu yosippaingalo!!///

நன்றி தோழி

Porkodi (பொற்கொடி) சொன்னது…

பந்துக்கு தெரியும் அது நமக்கு சொந்தமானதுன்னு.. அதான் திருப்பி வந்துருது. (உனக்கு ஏதாவது சொந்தம்னு நினைச்சா, அது தானாவே உன்னிடம் வரும், இல்லேன்னா அது என்னிக்குமே உன் சொந்தமா இருந்தது இல்லன்னு ஒரு தத்துவம் இருக்கே!)

Chitra சொன்னது…

:-)

Kanchana Radhakrishnan சொன்னது…

present LK

எல் கே சொன்னது…

//Porkodi (பொற்கொடி) said...

பந்துக்கு தெரியும் அது நமக்கு சொந்தமானதுன்னு.. அதான் திருப்பி வந்துருது. (உனக்கு ஏதாவது சொந்தம்னு நினைச்சா, அது தானாவே உன்னிடம் வரும், இல்லேன்னா அது என்னிக்குமே உன் சொந்தமா இருந்தது இல்லன்னு ஒரு தத்துவம் இருக்கே!)//

tappu

@chitra
:)

@kanchana

thanks madam

Harini Nagarajan சொன்னது…

Nalla pathivu! Recent a naan kooda en purse a tholachen athula kooda oru debit card irunthuthu. aana atha use panni 2 yearsku mela aaguthu. atha eduthutu bankku pona avan sattaya pudikatha koraya "unaku yevlo letter podarathu??" apdinu kepan. But had lost a huge amount of money! :(

@Kelvikku Bathil Adutha vaati intha maari mokka kelvi keka koodathunu unga thalailaye vizhum! :P

நாமக்கல் சிபி சொன்னது…

//சரியான விடை எழுதுபவர்களுக்கு எனது பதிவு தொகுப்பு ஒன்று பரிசளிக்கப்படும். //

அதுக்கு நான் கேப்டன் டிவியே பார்த்துடுவேன்!

நாமக்கல் சிபி சொன்னது…

//(உனக்கு ஏதாவது சொந்தம்னு நினைச்சா, அது தானாவே உன்னிடம் வரும், இல்லேன்னா அது என்னிக்குமே உன் சொந்தமா இருந்தது இல்லன்னு ஒரு தத்துவம் இருக்கே!)//

அட அட அட! என்னா ஒரு தத்துவம்! தாங்க முடியலைடா சாமி!

நாமக்கல் சிபி சொன்னது…

//But had lost a huge amount of money! :(//

அடடா! தொலைந்தவுடன் வங்கிக்கு தெரியப்படுத்தி அட்டையை டீ-ஆக்டிவேட் செய்யச் சொல்லி இருக்கலாமே!

எல் கே சொன்னது…

///அதுக்கு நான் கேப்டன் டிவியே பார்த்துடுவேன்!///
:(

//அடடா! தொலைந்தவுடன் வங்கிக்கு தெரியப்படுத்தி அட்டையை டீ-ஆக்டிவேட் செய்யச் சொல்லி இருக்கலாமே!//
அவருக்கு கால் பண்றதுகுல்லற உருவிட்டாங்க.

Veliyoorkaran சொன்னது…

கீழ வரலைனா பந்து மேல போயிரும்ல அதான்...!
-பந்தை தூக்கி போட்டு தூக்கி போட்டு மல்லாக்க படுத்து கேட்ச் பிடிப்போர் சங்கம்..!

எல் கே சொன்னது…

//Veliyoorkaran said...

கீழ வரலைனா பந்து மேல போயிரும்ல அதான்.//

ahah nalla yosanaithan. aana answer tappu. adikadi vaanga veliyoor

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கீழே விழுந்தாத்தான் அது பந்து, மேலே பறந்துபோனா அது பருந்து... சரிதானா!! :D :D

ஸ்ரீராம். சொன்னது…

உண்மை. என் நண்பருடைய மனைவி PIN நம்பர் மறந்துடுமேன்னு அதையும் எழுதி டேக் பண்ணி வச்சு, செல்லும் போனதால உடனே டி அக்டிவேட் செய்ய முடியாம பணம் விட்டாங்க...

Jaleela Kamal சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு , எல்லோரும் உஷாராக இருப்பது நல்லது, தெரிந்தவர்களிடம் சொல்கீறேன்.

செந்தில்குமார் சொன்னது…

அருமையான தகவல் .............

எல் கே சொன்னது…

@சாரல்
எப்படிங்க எப்படிலாம் யோசிக்கறீங்க

@ஸ்ரீராம்
சரிதான் சார். நிறைய பேரு இப்படி பண்றாங்க

@ஜலீலா
நன்றி. நிறைய பேருக்கு இந்த செய்தி போகணும்

@செந்தில்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@ஹரிணி

இந்த கேள்விய என்கிட்டே கேட்டது எங்க அப்பா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//சரியான விடை எழுதுபவர்களுக்கு எனது பதிவு தொகுப்பு ஒன்று பரிசளிக்கப்படும்//

எனக்கு answer தெரியும்... ஆனா இந்த பரிச குடுத்துடுவீங்களோனு தான் சொல்லலை (எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு.... முடியல...)

ஆனா நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி