Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

இரண்டு வார்த்தைகள்

இரண்டு  வார்த்தைகள்  சம்பவம் ஒன்று  வெள்ளிகிழமை மாலை , ஆறரை மணி  அளவில் ரங்கராஜபுரம் பாலத்தில் இருந்து மேற்கு மாம்பலம் நோக்கி  வ...

இரண்டு  வார்த்தைகள்
 சம்பவம் ஒன்று
 வெள்ளிகிழமை மாலை , ஆறரை மணி  அளவில் ரங்கராஜபுரம் பாலத்தில் இருந்து மேற்கு மாம்பலம் நோக்கி  வந்துகொண்டிருந்தேன் . நாற்பது வயதிற்கு மேற்பட்ட நபர் , பாலத்தில் இருந்தே ஹாரனில் இருந்து  எடுக்காமல் வந்தார். நான் அவருக்கு வழி  விடவில்லை. (வேண்டுமென்றேதான் செய்தேன் ). போத்திஸ்   சந்திப்பை  அணுகும் முன்  வயதான பெண் ஒருவர் சாலையை கடந்துக் கொண்டிருந்தார். நான் ப்ரேக்  நிறுத்திவிட்டு அவர்கள் சாலையைக் கடந்தவுடன் செல்ல நினைத்தேன். அதற்குள் பின்னால்   வந்த நபர் அவர்களை திட்டத் துவங்கினார்.
அவரைப் பார்த்து இரண்டு  வார்த்தைதான்  சொன்னேன் . கோபத்தில் முறைத்துவிட்டு பறந்து விட்டார்.
நான் சொன்னது " வயதான முட்டாள் "
சம்பவம் இரண்டு
நேற்று மாலை .  நூறடி சாலையில் ஸ்ருதி  மியூசிக்  சிக்னலில் இருந்து கேகே நகர் நோக்கி வந்துக் கொண்டிருந்தேன் . காமராஜர் சாலை  சந்திப்பில்  நேரத்தில்   எப்பொழுதுமே ட்ராபிக் அதிகமாய் இருக்கும் . எனவே சமீபக்  காலமாய்  குறிப்பிட்ட நேரங்களில் போக்குவரத்துக் காவலர் நின்று போக்குவரத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தார். நூறடி சாலையில் இருந்து வந்த வாகனங்களை  விட்டு  காமராஜர் சாலையில்  இருந்து வந்த வாகனங்களை அனுப்பிக் கொண்டிருந்தார்.  அதிகபட்சம்  இரண்டு நிமிடங்கள் நிற்க நேரிடலாம்.அதற்குள் எனதருகில் ஆக்டிவாவில் வந்து நின்ற வெண்ணை தேவதை, வண்டியில் இருந்த ஹாரனை பேட்டரி தீரும் அளவிற்கு அடித்தார்.இங்கயும் இரண்டு வார்த்தைகள்தான் சொன்னேன். இந்தப் பொண்ணும்  முறைக்குது
 இங்க சொன்ன  இரண்டு வார்த்தைகள் "படித்த முட்டாள் "
அன்புடன் எல்கே

2 கருத்துகள்

சென்னை பித்தன் சொன்னது…

எப்படியிருக்கீங்க எல்கே?
முட்டாளியிருப்பதற்கு வயதோ கல்வியோ ஒரு தடையல்ல!நன்று சொன்னீர்கள்.

எல் கே சொன்னது…

very fine sir