முதல் மூன்று நாட்கள் பள்ளி செல்ல அடம்பிடித்த திவ்யா ,நான்காம் நாள் நான் கூடி சென்ற பொழுது அழாமல் உள்ளே சென்றுவிட்டாள். என் மனைவிக்கு ஆச்சர்...
************************************************************************************
அன்று மாலை ,நான் வீடு திரும்பியப் பின் "இன்னிக்கு ஸ்கூல்ல என்ன பண்ண?"
"விளையாடினேன் "
"ரைம்ஸ் சொல்லித் தந்தாங்களா ??"
"இல்லை "
"அப்புறம் வேற என்ன பண்ண ?"
"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"
"..............??"
என்ன சொல்ல இதுக்கு நான் ??
************************************************************************************
இன்றைக்கு பள்ளியில் விடும்பொழுது என் மனைவியிடம் திவ்யா
"அம்மா டாட்டா. "
"சரி அழாம சமத்தா இரு "
"சரி. நீ சீக்கிரமா வந்து என்னை கூட்டிகிட்டு போய்டு. இல்லாட்டி நான் அழுவேன் "
************************************************************************************
ஒரு வாரத்திலேயே அந்த சூழலுக்கு ஒத்துப் போய் விட்டாள். இப்பொழுது பள்ளி செல்ல அடம்பிடிப்பது இல்லை. இன்னும் மற்ற குழந்தைகளுடன் அதிகம் பழக ஆரம்பிக்கவில்லை. ஒன்றிரண்டு வாரங்களில் சரியாகிவிடும் என்று எண்ணுகிறேன்
அன்புடன் எல்கே
37 கருத்துகள்
"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்//
க்யுட் :))
//"அப்புறம் வேற என்ன பண்ண ?"
"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"//
இதுதான் இதுதாங்க குழந்தைங்ககிட்ட பிடிச்சது...
//அப்புறம் வேற என்ன பண்ண ?"
"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"
"..............??"//
நச்சுன்னு ஒரு பதில்
வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்
நல்ல பகிர்வு கார்த்திக். இப்பல்லாம் குழந்தைங்கதான் டீச்சருக்கு பாடம் சொல்லிக்கொடுக்கறாங்க!
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_18.html
யார் இந்த திவ்யா ?
@தொப்பி
என்னோட பொண்ணு
திவ்யா ரொம்ப சமத்து தான். டீச்சருக்கே ரைம்ஸ் சொல்லி கொடுத்திருக்காளே!!! குழந்தைகள் எல்லாமே இப்ப விவரமாத்தான் இருக்காங்க.
சமத்து திவ்யா!!
நல்ல டீச்சர்!
சமத்து.......
ரைம்ஸ் உங்களுக்கு தெரியுமா? # டவுட்டு
கொஞ்ச நாள்ல அப்பா பாடம் கேட்டுக்கலாம் திவ்யாவிடம் ......வாழ்த்துகள்
நல்ல வேளை அடுத்து ஸ்கூல விடும்போது அப்பாவும் அம்மாவும் அழாம இருங்கன்னு சொல்லப் போறா >>:))
இன்னும் கொஞ்ச நாளில் தோழிகள் நிறைய கிடைத்து விட்டால்,
சனி ஞாயிறு கூட் ஸ்கூல் இருந்தா நல்ல இருக்குமேன்னு தோனும்
சமத்து பொண்ணு...
இன்றைக்கு பள்ளியில் விடும்பொழுது என் மனைவியிடம் திவ்யா
"அம்மா டாட்டா. "
"சரி அழாம சமத்தா இரு "
"சரி. நீ சீக்கிரமா வந்து என்னை கூட்டிகிட்டு போய்டு. இல்லாட்டி நான் அழுவேன் "
....ha,hA,HA,HA,HA,...
//என்ன சொல்ல இதுக்கு நான் ??
//
நான் தான் அப்பவே சொன்னன்ல.. என்ன மாதிரியே புத்திசாலியா வருவாங்கன்னு...
ரொம்பவே சமத்துக்குழந்தையா இருக்கா.
பகிர்வுக்கு மகிழ்ச்சி,இதனை வீட்டில் சொன்னேன்,எல்லாரும் ரசிச்சாங்க.
ஸ்மார்ட் கேர்ள்:)
அவள் ஒரு தொடர்கதை சார்.'ரம்யா வச்சுருக்கறா மாதிரி ரப்பர் வாங்கித்தா.ப்ரியா கிட்ட இருக்கறாப்பல பேனா வாங்கித்தா.
எல்லாம் இனிமேதான் ஒண்ணொண்ணா வரும்.தயாரா இருந்துக்கங்க சமாளிக்க.ஆல் தி பெஸ்ட்
பிள்ளைங்க வெளில எல்லாம் ரொம்பச் சமத்து தான்.. ஆனா வீட்ல மட்டும் terror-ஆ இருக்குதுங்க..
மழலைகளை ரசிக்கும் பாக்கியம் கிடைத்ததில் ப்ளே ஸ்கூல் டீச்சர்ஸ் கொடுத்து வச்சவங்கதான்.
//"அப்புறம் வேற என்ன பண்ண ?"
"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"//
நான் திவ்யாவிடம்: ம்ம்.. வெரிகுட். அப்படித்தான் இருக்கணும். டீச்சர் நல்லா படிக்கிறாங்களா?.. இல்லைன்னா நெறைய ஹோம்வொர்க் கொடுக்கணும் சரியா??..
//"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"
"..............??"////
:)
கியூட் பேபி
//நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்//
டீச்சர்கிட்ட பீஸ் கேக்காம விட்டாளே உன் பொண்ணு... ஹா ஹா ஹா... செம cute...
குருவுக்கே உபதேசம் பண்ணிட்டு வந்துட்டாளா.. :))
இது என்னங்க தலைப்பு பாபுவும் அப்பாவும் ன்னு வர்ற ஷாருக்கான் விளம்பரம் மாதிரி இருக்கு...
உங்க குழந்தையோட குறும்புகள் ரசிக்கும் வண்ணம் இருந்தன...
கார்த்திக்...திவ்யாவைவிட நீங்கதான் இப்போ குழந்தையா இருக்கீங்கபோல !
தேனம்மை கமெண்ட் ரசனையாக இருந்தது. நடந்தாலும் நடக்கும்!
// ஒன்றிரண்டு வாரங்களில் சரியாகிவிடும் என்று எண்ணுகிறேன் //
அதே.. அதே.
குழந்தையோட நீங்களும் குழந்தை ஆயிட்டீங்க.
குழந்தைகள் இப்ப விவரமாத்தான் இருக்காங்க.
//"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"
"..............??"//
டீச்சர்தான் சமத்து.....
அந்த காலத்துல ஒரு சாமிநாதன். இப்ப எல்லா குழந்தைகளும் சாமிநாதன்கள். நமக்கே வகுப்பெடுக்கும்பொழுது டீச்சரெல்லாம் ஜுஜுப்பி. டீச்சராக என் அனுபவம் இது. திவ்யாவுக்கு என் அன்புகள்
செல்லக் குட்டி திவ்யாவுக்கு ரெண்டு சாக்லேட் எக்ஸ்ட்ரா குடுங்க.
>>> திவ்யா மற்றும் தங்கள் குடும்பத்தினர் நலமுடன் வாழ வாழ்த்துகள்!!
எல்லா குழந்தைகளும் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் எனத் தெளிவாகிறது.
திவ்யாவின் மழலையை ரசித்தேன். சீக்கீரம் என்னை கூட்டிக்கிட்டு போய்டு. இல்லாட்டி அழுவேன்.
உங்கள் எண்ணப்படி ,எல்லாம் நல்லபடி நடக்க எங்கள் ஆசியும் வாழ்த்தும்
கருத்துரையிடுக