ஏரியை அடுத்து நீங்கள் பார்க்க வேண்டிய இடம் அண்ணா பார்க். ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் இருக்கும் அளவிற்கு பெரிய பூங்கா இல்லை இது. அதிக...
இதேப் போல், ஏரியை சுற்றி அமைந்துள்ள பூங்காவும் பார்க்க வேண்டிய ஒன்று.
பக்கோடா பாய்ண்ட்:
ஏற்காட்டில் இருக்கும் ஆதிவாசிகள் உருவாக்கி இருக்கும்ஒரு வகையான பாறைகளின் அமைப்பு பக்கோடா போன்று இருப்பதால் இதற்க்கு இந்தப் பெயர். இங்கிருந்து பார்த்தால் ஆத்தூர் மற்றும் அயோத்தியாப்பட்டினம் போன்ற இடங்களை காண முடியும். இது ஏற்காட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
லேடீஸ் சீட் :
இந்த இடத்தில் இயற்கையாகவே சீட் போன்ற அமைப்பு உள்ளது. இங்கிருந்து பார்த்தல் சேலம் நகரம் நன்றாக தெரியும். இங்கு டெலஸ்கோப் வசதி உள்ளது. வானம் மூட்டம் இல்லாமல் இருந்தால், மேட்டூர் அணை தெரியும். இரவு நேரத்தில் இங்கிருந்து மின்னொளியில் மிளிரும் சேலம் நகரத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாகும்.
கிளியூர் அருவி :
மிக சமீபகாலமாகவே அனைவரும் செல்லும் ஒரு இடம். காரணம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை,இங்கு செல்லும் பாதை மிகவும் மோசமாகவும், சமூக விரோதிகளின் இறிப்பிடமாகவும் இருந்தது. பின் திரு ராதா கிருஷ்ணன் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொழுது பாதையை சீர்படுத்தி அனைவரும் சென்றுவரும் வண்ணம் மாற்றினார். அவசியம் போக வேண்டிய ஒரு இடம்.
சேர்வராயன் கோவில் :
மலையின் உச்சியில் அமமிந்துள்ள கோவில், இங்கிருந்து ஏற்காடு முழுவதும் பார்க்க இயலும். மே மாதம் நடக்கும் விழாவில், ஏற்காட்டில் உள்ள பழங்குடியினர் அனைவரும் கலந்துக் கொள்ளுவர். சமீப காலங்களில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான கோவிலும் இதுதான்.
எனக்கு நினைவில் இருப்பதைஎழுதி விட்டேன். சிலது விடுபட்டு இருக்கலாம் . காரணம் ஒரு சில இடங்களை பற்றிய முழு விவரங்கள் இல்லை. அடுத்தப் பகுதியில் , ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து இன்று பிரிந்த நகரம் .
அன்புடன் எல்கே
29 கருத்துகள்
azhaga irukku.. aaamaa pakoda point pona suda suda pakoda kadaikuma??
ooty irukura aadhivasigala pathom naanga ponapo onnume kadaikala aana :(
but niraya photos kedachudhu :)
பகிர்வுக்கு நன்றி.
Nalla Thagavalkal. Pakirvukku nandri nanbare.
venkat
நல்லாருக்கு. அப்படியே தொடருங்கள்.
காயத்திரி...@ பகோடா பாயிண்ட்ல சூட பக்கோடா அப்புறம் சட்னி எல்லாம் கொடுக்குறாங்களாம்.
கிளியூர் அருவில கிளி கூட கொடுக்குறாங்களாம்..!
எல்.கே @ இன்பர்மேட்டிவ் பாஸ்...!
thxs for sharing....
நல்ல பகிர்வு எல்.கே. நன்றி. படங்களும் நன்றாக இருக்கிறது.
வாவ்... பகிர்வும் போட்டோவும் அருமை.
அழகா இருக்கு படங்கள்.
கண்டிப்பா பார்க்க வேண்டிய இடங்கள்.
தமிழ்நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு இடங்களில் ஒன்று ஏற்காடு. இந்தியா திரும்பினால் இந்த இரண்டு இடங்களிலும் வருடத்துக்கு ஆறு மாதமென்று தங்கிவிட ஆசை.
அருமையான புகைப்படங்கள்; சுவையான தகவல்கள். நன்றி,
படங்கள் அருமை.
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..
super post.
படங்கள் அருமை..
கண்டிப்பா போகணும் இந்த இடங்களுக்கு..
@காயத்ரி
பக்கோடா கிடைக்காது ஆனால் பஜ்ஜி கிடைக்கும்
@ஆசியா
நன்றி சகோ
@வெங்கட்
நன்றி நண்பா
@நாகராஜா சோழன்
நன்றி
@தேவா
ஹஹஅஹா தேங்க்ஸ் பாஸ்
@மேனகா
நன்றி
@நித்திலம்
நன்றி
@குமார்
நன்றி
@சுசி
படங்கள் கூகிளார் உதவி
@அப்பாதுரை
நன்ற சார் அவசியம் வாங்க
@புவனேஸ்வரி
நன்றிங்க
@ பாலாஜி
நன்றி
@சாரல்
நன்றி
பகிர்வுக்கு நன்றி.
அடுத்த முறை ஏற்காடு செல்ல வேண்டும். தகவலுக்கு நன்றி.
கருத்துரையிடுக