முதலில் அதிக இடைவெளி விட்டு இதை எழுதுவற்கு மன்னிக்கவும். இனி, சேலத்தில் பார்க்க வேண்டிய/செல்ல வேண்டிய சில இடங்கள் ஏற்கனவே கோட்டை மாரியம...
சேலத்தில் பார்க்க வேண்டிய/செல்ல வேண்டிய சில இடங்கள்
ஏற்கனவே கோட்டை மாரியம்மன் கோவிலை பற்றி சொல்லி இருக்கிறேன். அங்கு இருந்து ஐந்த நிமிட நடையில், சுகவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகப் பழமை வாய்ந்த கோவில் இது. இப்பொழுது இதை பற்றிய விவரங்கள் சரியாக நினைவில்லாதக் காரணத்தால் இதை பற்றி விரிவாக எழுத இயலவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
அண்ணா பூங்கா
நகரத்திற்குள், மக்களின் பொழுது போக்கிற்கு என்று இருக்கும் ஒரே இடம் இது மட்டும்தான். ஒரு காலத்தில், பாழடைந்து கிடந்த இது, சரி செய்யப் பட்டு சிறுவர்கள் விளையாடும் வகையில் பல பொழுது போக்கு அம்சங்களுடன் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது இது சென்னை மெரீனா பீச் போன்று மாறி விட்டது.
சினிமா அரங்குகள்
ஒரு காலத்தில் பல தரமான சினிமாக்கள் சேலத்தில் எடுக்கப் பட்டன. புகழ் பெற்ற மாடர்ன் பிலிம்ஸ் சேலத்தில்தான் இயங்கி வந்தது. ஒரு பத்து வருடம் முன்பு வரை சேலத்தில் நிறைய தியேட்டர்கள் இருந்தன. இன்று பெரும்பாலானவை இடிக்கப்பட்டு மண்டபமாக மாறி விட்டது. நகரப் பேருந்து நிலையத்தை ஒட்டிய கிச்சிப் பாளையம் பகுதிதான் தியேட்டர்களுக்கு புகழ் பெற்ற இடம்., இங்கு அருகருகே பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. இப்பொழுது எண்ணிக்கை குறைந்துவிட்டது,.
அழகாபுரம்
அழகான தமிழ் பெயர் இருக்க , அதை பேர்லேண்ட்ஸ் என்று மாற்றி அழைக்கின்றனர் . ஏன் என்றுதான் புரியவில்லை. இது சேலத்தின் வசதியான மக்கள் வாழும் இடம். இங்குதான் சேலத்தில் அடுக்கு மாடி வீடுகள் முதலில் வந்ததாய் ஞாபகம். (சரியாக நினைவில்லை ). சேலத்தின் குறிப்பிடத்தக்க இரண்டு ஷாப்பிங்க மால்கள் இங்கு உள்ளன. அதேபோல் சேலத்தின் இரண்டு பெரிய கல்யாண மண்டபங்களும் இந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளது .
இப்பொழுது அரசு மருத்துவ மனை விரிவாக்கம் செய்யப்பட்டு புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது . ஆனால், அதை கட்டுவதற்காக பல மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது வேதனையான ஒரு விஷயம். அது மட்டும் அல்லாது, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய வளாகம் கட்டிய பொழுதும் அதேதான் நடந்தது. என்று இவர்கள் உணர்வார்களோ மரங்களின் முக்கியத்துவத்தை.
கடந்த கோடைகாலத்தில், வரலாறு காணாத அளவு இருந்தது வெய்யிலின் தாக்கம் சேலத்தில். அதற்கு இதுவும் ஒரு காரணம்.
அடுத்தப் பகுதியில் நான் பிறந்து வளர்ந்த செவ்வாய் பேட்டை பகுதியை பார்க்கலாம்..
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக